இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துயகொந்தாவை சந்தித்துள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்து குறித்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஆதரவை சந்தோஷ் ஜா மீண்டும் உறுதிப்படுத்தினார், அதே நேரத்தில் பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் இந்தியாவின் தொடர்ச்சியான உதவியை துயகொந்தா பாராட்டியுள்ளார்.








