இரவணனார் நூல் அறிமுக நிகழ்வு நேற்று முந்தினம் (22/03/2025) பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டச் செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மா. ஸ்ரீஸ்கந்தகுமார் தலையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய தவைவர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


சிறப்புப் பிரதிகள் வழக்கபட்டதை தொடர்ந்து நூல் அறிமுகம் உரையை மா. ஸ்ரீஸ்கந்தகுமார் அவர்கள் (மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) – மன்னார்) வழங்கினார்.
நூல் நயவுரை பண்டிதர் திருமதி ஏ.சுஜானா அவர்கள் வழங்கினார். நூலாசிரியரால் நூல் பற்றிய விழக்கமும் கருத்துப் பரிமாற்றமும் இடம் பெற்றது.


[மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்]








