இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கலோரெஸ் மனிதாபிமான கண்ணியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார்.

ஜப்பானிய நிதி பங்களிப்புடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இந்த நிலைவில் குறித்த பணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், ஊழியர்களுடனும் கலந்துரையாடினார்.
[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]








