கொழும்பு மற்றும் குவைத் இடையேயான விமான சேவைகள் இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும், தற்போது போர் நிலைமை ஓரளவு தணிந்துள்ளதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.








