கந்தளாய் – ரஜ எல  பகுதியில் நேற்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில்19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் பயணித்த  வேன், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன்,

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here