இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27), நாளை (28), நாளை மறுதினம் (29)  க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் பலத்த மழையினால் வெள்ளம், மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், 29ஆம் திகதி காலநிலை தொடர்பில் ஆராய்ந்து பின்னர், உயர்தர பரீட்சையை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here