Friday, July 17, 2026
No menu items!

உயர்தர பரீட்சை

2026 உயர்தர பரீட்சை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சையை மேலும் ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அமைச்சு இந்த முடிவை அறிவித்துள்ளது. 'தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைய, உயர்தர...

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

சமாதான நீதவான் நியமனம் தொடர்பான கட்டளைகள் பலவற்றைத் திருத்தி, நீதி அமைச்சரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்டவர்களுக்கு இந்த வர்த்தமானியின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வர்த்தமானியில் நிர்வாக மாவட்டங்களுக்கான சமாதான நீதவான் நியமனத்தின் போது 30 வயதுக்குக் குறையாத மற்றும் 75 வயதுக்கு மேற்படாதவர்களாக இருக்க...

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி கலைப் பிரிவில் முதலிடம்!

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (26) வெளியாகின. அதில் கலை பிரிவில் மன்னார்  கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி  ஜெயந்தன் பவதாரணி 3...

கணிதப் பிரிவில் முதல் இடம் பெற்ற வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன்!

உயர்தர பரீட்சையில் கணிதப் பிரிவில் வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவன் குகதாசன் தனோஜன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றையதினம் (26.04.2025) வெளியாகின. இந்நிலையில் கணிதப் பிரிவில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற குகதாசன் தனோஜன் என்ற மாணவன் மூன்று...

உயர்தர பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்..!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன், கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, 2024 ஆம்...

A/L பெறுபேறுகள் விரைவில்..!

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31.12.2024) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையில் பல கட்டங்களாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சை...

உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலைவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (27), நாளை (28), நாளை மறுதினம் (29)  க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறாது என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img