உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் மற்றும் செயலாளர்களது நிர்வாக கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது ஊடக சந்திப்பு 23.02.2025 கிளிநொச்சி பகுதியில் நடைபெற்றது.
இந்நிலையில் உலக தமிழ் பண்பாட்டு பேரவையின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவிக்கையில்,

உலகத் தமிழ் பேரவையின் 52 ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு பதினான்காவது உலக தமிழ் பண்பாட்டையும் 2026 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்மாண்டமான முறையில் கிளிநொச்சி பகுதியில் நடாத்துவதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நடைபெற்றதுடன் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் நினைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும் அத்துடன் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக இதன் பொது தெரிவித்தனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








