மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணையை இலகுபடுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தியில் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.
இதற்கமைய, ஆணையத்தின் பணிகள் அதன் சுதந்திரமான விசாரணை செயல்முறைக்கு எந்தவிதமான செல்வாக்கோ அல்லது தடையோ இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அமைச்சரும் அமைச்சகச் செயலாளரும் தத்தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.








