இன்று (26.07) பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தொடங்கும் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கு முன்னதாக   ரயில் பாதையின் மின் வடங்களுக்கு  தீவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான “தீங்கு விளைவிக்கும்” செயல்களால் பிரான்சின் அதிவேக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரெஞ் மாநில ரயில்வே நிறுவனமான SNCF  X தள  இடுகையில், “பெரும்பாலான ரயில்கள் திருப்பி விடப்பட்டன மற்றும் ரத்து செய்யப்பட்டன” என்று கூறியது, மேலும் “அனைத்து பயணிகளும் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறும் ரயி நிலையத்திற்கு செல்ல வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டது.

” தீ வைத்து எரிக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலைநகர் ரயில் நிலையங்களில் பொலிசார் பாதுகாப்பை அதிகரித்து  வருவதாக பாரிஸ் பொலிஸ் தலைவர் லாரன்ட் நுனெஸ்  தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here