தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எதுவும் சொல்லாதவர்கள் தற்செயலாக கடற்படை வீரர் மரணித்ததற்க்கு அஞ்சலி செலுத்துவதற்க்கு சென்றுள்ளனர்.

தமிழ் மக்கள்  கொல்லப்பட்ட போது  எதுவும் சொல்லாதவர்கள். தற்செயலாக கடற் படை வீரர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்க சென்றுள்ளார்கள் என்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்  சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுல சிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வல்வெட்டித் துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரை  நியமிப்பது தொடர்பில் அனைவரும் ஒரே குடையின் கீழ்  செயற்பட வேண்டும் என்றும். முதியவர்கள் இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here