நிதி தகராறு காரணமாக ஒன்பது மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகக் கூறப்படும் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்ததுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் தெனியாய,
பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அவர்கள் இருவரும் கூலி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த நாளில், இருவருக்கும் இடையே நிதி தகராறு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








