இன்று நண்பகல் சஜீத் பிரேமதாஸவை ஆதரித்து கிளிநொச்சி 155ம் கட்டை சந்தியில் தேர்த்தல் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜீ.எல் பிரீஸ், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரும் வடமாகாண இணைப்பாளருமான உமாச்சந்திர பிரகாஸ், கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளர் மரிய சீலன், முன்னாள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்கள கட்டளை அதிகாரி ரட்ணப்பிரிய உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் , மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.









