கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர, சுமார் 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கதிர்காமம் ஆலயத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் முறைப்பாடளித்துள்ளார்.
இதுதொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகக் கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.








