எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிற்கு அருகிலுள்ள மா மரத்தில் இருந்த குளவி கூட்டை கழுகு ஒன்று தாக்கி கலைத்ததால் ஆரம்ப பாடசாலையில் உள்ள மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (25.09.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் சிலர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








