எனது சார்பிலும், இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில்  பணியாற்றும் எனது சக ஊழியர்களின் சார்பிலும், இலங்கை நட்பு அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் எனது மனமார்ந்த  புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கைக்கான சவூதி அரேபியத்தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சவூதி அபேியத்தூதுவர் காலித் பின் ஹமூத் அல் – கஹ்தானி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இவ் ஆண்டு இலங்கைக்குடியரசிற்கும் அதன் மேன்மைமிகு மக்களுக்கும் நன்மை, அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்றும், எமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் உறவு அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறையவனிடம் பிரார்த்திக்கிறோம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள்! முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here