புதிய தவணை ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 4.6 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை சீருடைகளை விநியோகிக்கும் திட்டத்தை கல்வி அமைச்சு (MOE) அறிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சீருடைகளும் வலயக் கல்வி அலுவலகங்கள் மூலம் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு விநியோகத்திற்கு 11,817 மில்லியன் மீற்றர் துணி தேவைப்படுவதாக MOE செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.








