முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத் வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
அரச வாகனங்களை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 15ஆம் திகதி நிதி குற்றங்கள் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.








