திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் நீர்ப்பாசனம் பொறியலாளர்குட்பட்ட பகுதியில் பெரும்போக நெற் செய்கை அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தின் நீரினால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது பேராறு முதலாம் கண்டம் வான் எல,ரஜஎல,தம்பலகாமம் போன்ற பகுதியில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுவுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசாங்கத்தை விட  இந்த அரசாங்கத்தில்  நெல்லின் விலை போதுமானதாக உள்ளதாகவும் பசலை கூட்டி தந்துள்ளமையால் நெற்செய்கைக்குகு உதவியாக இருந்ததாகவும் தெரிவித்த விவசாயிகள்

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here