விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் தம்மை கைது செய்து விடுதலை செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான உத்தரவு இன்று (04.09) அறிவிக்கப்பட இருந்தது. எவ்வாறாயினும், தீர்ப்பை அறிவிப்பது ஒக்டோபர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று(04.09) அறிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here