கிளிநொச்சி உருத்திரபுரம் பொறிக்கடவை வீதியில் நேற்றிரவு எட்டு மணியளவில் திடீரென கார் தீப்பற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி வந்த நிலையில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.


தீ விபத்து தொடர்பான விசாரணைகளுக்காக கார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]








