Friday, April 17, 2026
No menu items!

தீ விபத்து

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  

ரயிலின் என்ஜினில் தீ விபத்து..!

அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் புறப்படவிருந்த “ரஜரட்ட ரெஜிண” ரயிலின் என்ஜினில் இன்று (25) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு  தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், “ரயிலின் என்ஜின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது எனவும் இதற்கான   காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை,” எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்குப் பிறகு, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில்...

தம்புள்ளை சந்தை மைதானத்தில் தீ விபத்து !

தம்புள்ளை நகராட்சி மன்றத்தின் அதிகாரப்பரப்பில், தம்புள்ளை சந்தை மைதானத்தில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இன்று (செப்டம்பர் 18) அதிகாலை தீ விபத்து நிகழ்ந்தது. காலை பணிக்கு வந்த நகராட்சி ஊழியர் ஒருவர் தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புப் படையினரை தகவல் அளித்தார். அவர்களின் விரைவான நடவடிக்கையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும்...

தொடருந்து நிலையத்துக்கு அருகில் பாரிய தீ விபத்து..!!

தெமட்டகொட, பேஸ்லைன் வீதி தொடருந்து நிலையத்துக்கு அருகில் ஏற்பட்ட தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .

ஹட்டன் நகரத்தில் பாதணி கடையில் தீ விபத்து!

ஹட்டன் பிரதான நகரில் அமைந்துள்ள பாதணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவிய நிலையில், ஹட்டன் - டிக்கோயா மாநகரசபை தீயணைப்புத் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள்...

ராஜகிரிய பகுதியில் தீ விபத்து!

ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று (27) மதியம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய பிரதேசத்தில் பாதுகாப்பு பெட்டகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலக கட்டடம் ஒன்றிலேயே தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பணிகளில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

யாழ். நெல்லியடி பகுதியில் தீ பரவல்..!

இன்று புதன்கிழமை (5/21/2025) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கரவெட்டி பிரதேச சபையின் செயலாளரினால் உடனடியாக யாழ்.மாநகர சபை தீ அணைப்பு பிரிவுக்கு 4:42 மணிக்கு தகவல் வழங்கி...

கடுகண்ணாவ காட்சியறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!

கடுகண்ணாவ பொலிஸ் பிரிவின் அம்பிலிமிகம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மோட்டார் சைக்கிள் காட்சியறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க குடியிருப்பாளர்களும் கடுகண்ணாவ காவல்துறையினரும் முயற்சித்த போதிலும், குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுகண்ணாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் சேனநாயக்க தலைமையிலான...

உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி!

சீனாவின் லியோனிங்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை, இன்று (29) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட உணவகத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இரண்டு...

வங்கியொன்றில் திடீர் தீ விபத்து..!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வங்கியொன்றில் இன்று வெள்ளிக்கிழமை (18/04/2025) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

மோதலுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் முதலாவது மசகெண்ணை கப்பல்

மத்திய கிழக்கு மோதல் தொடங்கி பின்னர் நாட்டுக்கு மசகெண்ணை ஏற்றி வரும் முதல் கப்பல் நாளை (17) தீவை வந்தடைய உள்ளது என சிலோன் பெட்ரோலியம்...
- Advertisement -spot_img