தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்தபோதே இனந்தெரியாத நபரொருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உடனடியாக உள்ளூர் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாக்குதலில் அவரது கழுத்தில் சுமார் ஒரு சென்றி மீற்றர் அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும்  இத் தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here