வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (5) காலமானார்.

அவரது பூதவுடல் மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படது.

அன்னாரது பூதவுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரும், அரசியல் பிரதிநிதிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து  தோட்டவெளி ஜோசப் வாஸ் ஆலயத்தில் இன்று புதன்கிழமை (7) காலை இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு விடத்தல்தீவு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here