சட்டமா அதிபர் திணைக்களத்தின் திறமையான அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் துறையில் சிறப்புத் திறன் கொண்ட அதிகாரிகள் குறைவாக இருப்பதாகவும், வரையறுக்கப்பட்ட குழு அதிக எண்ணிக்கையிலான கோப்புகளால் சுமையாக இருப்பதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு அதிகாரியின் கையில் 200 – 300 கோப்புகள் சிக்கியிருப்பதாகவும், விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் குறைபாடுகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here