கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரணவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய உதவியுடன் தென் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் டெப் கணினிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு காலி ஹோல் டி கோல் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், 300 பில்லியன் ரூபாய் செலவில் பாடசாலை மாணவர்களுக்கு 200 ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் 2000 டெப் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.








