Sunday, July 26, 2026
No menu items!

பாடசாலை மாணவர்கள்

பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி..!!

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நிதியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...

​ பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் ஆபத்தான நோய்; வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை!

பார்வையைச் சிதைக்கக்கூடிய ஒரு படிப்படியான கண் கோளாறான கெரட்டோகோனஸ் (Keratoconus), இலங்கையில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலரிடையே அதிகரித்து வருவதாக தேசிய கண் வைத்தியசாலை எச்சரித்துள்ளது. ​இந்த நோய் அரிதான ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்டதாகவும் தற்போது எட்டு வயது சிறுவர்களிடமும் கூட இது வெளிப்படுவதாகக் கொர்னியா சத்திரசிகிச்சை நிபுணர் கலாநிதி. குசும் ரத்னாயக்க  தெரிவித்தார். உலக...

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு!

இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், உயர் தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர்...

மாணவர்களுக்கான பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம் – அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!

பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து பிளாஸ்டிக் உபகரணங்களுக்கும் 2026 ஏப்ரல் 1 முதல் இலங்கை தரச் சான்றிதழான (SLS) சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை!

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். ஜ.நிரோஜா என்ற குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் க.பொ.த. (சா/தர) ப் பரீட்சையில்  முதல் முறையாக 9A பெற்று சாதனை படைத்துள்ளார். 9A பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு அதிபர் திரு பா.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஊக்குவிப்புத்...

பாகிஸ்தானில் பாடசாலை பேருந்து மீது குண்டுவெடிப்பு தாக்குதல்..!

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பாடசாலை பஸ்ஸினை  இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பு  தாக்குதலில் நான்கு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர். குஸ்டார் மாவட்டத்தில் பாடசாலை பஸ்ஸை குறிவைத்து ஜீரோபொயின்ட் என்ற பகுதியிலே இந்த  குண்டுவெடிப்பு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை கொல்லப்பட்டவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் காயமடைந்தவர்களை குவட்டா கராச்சிக்கு கொண்டு...

வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிஸாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்..!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வொன்றினை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் நேற்று (14/03/2025) மேற்கொண்டனர். யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை மாணவர்கள் பிரதான வீதிக்கு  அழைத்து வரப்பட்டு பாதுகாப்பான வீதி போக்குவரத்து தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டு, எவ்வாறு விபத்துக்கள் ஏற்படுகின்றது? அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ள முடியும், விபத்துக்களில் இருந்து எங்களை...

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி...

விடுமுறை நாட்களிலும் பஸ் பருவச் சீட்டை பயன்படுத்த நடவடிக்கை…!

சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மாதாந்த பருவச் சீட்டைப் பயன்படுத்தி பஸ்களில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் போக்குவரத்து சபைத் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் போது பெரும் அசௌகரியங்களை...

மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகம் செய்தவர் கைது…!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கைது...
- Advertisement -spot_img

Latest News

நாமலின் திருமண நிகழ்வு; 2.68 மில்லியன் மின் கட்டண வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை...
- Advertisement -spot_img