இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு புதிய தனித்துவமான வடிவமைப்புடன் கடவுச்சீட்டு புத்தகங்களை வழங்குவதை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
புதிய கடவுச்சீட்டு புத்தகங்களில் இலங்கையின் பல்வேறு முக்கிய சுற்றுலாத் தலங்களின் படங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பக்கங்கள் உள்ளன.
இதேவேளை, இந்த வாரத்தில் சுமார் 50,000 கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வரவுள்ள நிலையில் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“சனிக்கிழமை ஏறக்குறைய 7,500 கடவுச்சீட்டுகள் இலங்கைக்கு வந்துள்ளன, மேலும் 42,000 கடவுச்சீட்டுகள் புதன்கிழமை (23) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அமைச்சர் ஹேரத் கூறினார், பொதுமக்கள் விரைவில் தங்கள் கடவுச்சீட்டைப் பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.








