இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்று (02)  உத்தியோக பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.  .

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய ஓய்வு பெற்ற நிலையில்,  முர்து பெர்னாண்டோ இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட இவர், 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர், 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

இந்நாட்டின் பிரதம நீதியரசராக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியாக முர்து பெர்னாண்டோ வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here