கலபொட மற்றும் இங்குரு ஓயா இரயில் நிலையங்களுக்கு இடையிலான பென்ரோஸ் பகுதியில் மரம் சரிந்து விழுந்ததில் இரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி இரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.







