யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பகுதியில் ஏரியிலிருந்து உடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அச்சுவேலி காவல்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் ,40 வயதுடைய ராஜலிங்கம் சுபாஷினி எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று காலை செல்வச் சன்னதி ஆலயத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here