பெருமைமிகு இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியாவிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

வன்னி மக்கள் சுவர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகரில்  எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி செவ்வாய்கிழமை முன்னடுக்கப்பட்டவுள்ளது.

இந்த நிகழ்வுகள் காலை 09.00மணிக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி வவுனியா நகரம் முழுவதும்  முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் வாகன அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாக குறித்த அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் நாள் முழுவதும் வாகனங்களுக்கு தேசியக் கொடி  நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here