நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று ஞாயிறு (06) ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதோடு காயமடைந்தவர்கள் அனைவரும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மற்றும் காயமடைந்த பலருக்கும் கடுமையான துப்பாக்கி காயங்கள் ஏற்பட்டுள்ளன என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை சிறைக்குள் இருந்த ஒரு கைதிகள் குழு திட்டமிட்டு தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து வன்முறை ஆரம்பமானது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமை வேகமாக மோசமடைந்ததால், கலவரத்தை கட்டுப்படுத்தவும் மோதலில் ஈடுபட்டவர்களை கலைக்கவும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என கூறப்படுகிறது.
நேற்று சனிக்கிழமை (05) ஏற்பட்ட தனி கலவரத்தை தொடர்ந்து சிறை அதிகாரிகள் தற்காலிகமாக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையிலேயே மீண்டும் இந்த வன்முறை வெடித்துள்ளது.








