யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று முற்பகல் 10 மணியளவில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சிற்றூர்தியில் பயணித்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







