யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும்( துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி வைக்கும் பெட்டகங்கள்) சில வயர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை, பல்கலைக்கழக நூலக கட்டிடத்தின் சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு பொலிஸ் அதிகாரிகள் வந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
மேலும், இந்தப் பொருட்கள் எந்தவித நோக்கத்திற்காக வைக்கப்பட்டன என்பதையும், அவற்றின் மூலத்தை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








