ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2029-ல் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என அமைச்சர் சுனில் குமார கமகே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர், தவறான முடிவெடுக்கும் தன்மையால் இலங்கை முன்பு “திசையற்றதாக” மாறியிருந்ததாகவும், எனினும் தற்போதைய அரசாங்கம் அந்த நிலைமையை மாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் ஆதரவினால், நாடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அந்நிய செலாவணி பணப் பரிமாற்றங்களைப் பதிவு செய்ய முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here