சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்லாவிட்டால் நாட்டிற்கு கிடைத்த வெற்றிகளை மீண்டும் இழக்க நேரிடும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்விலே அவர் இதனைத் தெரிவித்தார்.

இறக்குமதி பொருளாதாரத்தில் தங்கியிருந்தமையே நாடு வீழ்ச்சியடைவதற்கு  முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இறக்குமதிக்காக பாரியளவில் கடன்கள் பெறப்பட்டதாக குறிப்பிட்டார்.

சரியான பொருளாதாரக் கொள்கைகளால், நாடு தற்போது வீழ்ச்சி நிலையில் இருந்து விடுபட முடிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாடு பயணிக்காத பட்சத்தில் இன்னும் 15 வருடங்களில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, நாடு விரைவில் ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்பிற்கு செல்ல வேண்டும் எனவும் அங்கு ஏற்றுமதி பொருளாதாரம் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமையில் இருந்து நாட்டை மீட்டுள்ளதுடன், நாடு சரியான பாதையில் செல்லாவிட்டால், தற்போது பெறப்பட்டுள்ள வெற்றி கையிலிருந்து நழுவக்கூடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here