பெலியத்தை நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பேருவளை ரயில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை சிறிநிவாச பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ரயில் கடவையை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலில் மோதுண்ட நிலையில் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து பேருவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






