போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது இலங்கையின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆதரவுடன் 200 பெற்றோலில் இயங்கும், நான்கு-ஸ்ட்ரோக்கை மாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.
முச்சக்கர வண்டிகள் மின்சார வாகனங்களாக மாற்றுவதன் மூலம் நிலையான போக்குவரத்து தெரிவுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் இந்த முயற்சியானது, கொழும்பில் இருந்து வரும் பயனாளிகளை முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.
இதற்கமைய பெண் உரிமையாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒற்றை முச்சக்கர வண்டியை நம்பி வாழ்வாதாரம் கொண்ட குடும்பங்களுக்கு தேர்வு செயல்பாட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








