கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகழ்வுதிணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது.எனபாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை,பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்துவாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்துஉறங்குவதாகவும், தெரிவித்துள்ள பொது மக்கள் இந்த பெரும் அவலத்திற்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 60 கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன நிலையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இவ்வாறு15 நாட்களுக்கு மேலாக வரிசையில் நிற்கின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here