நீதிமன்றத்தில் ஆஜராகத் தேவையில்லாத போக்குவரத்துக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை முறைப்படுத்தவும், போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கு சாரதியினர் எதிர்மறைக் குறியிடும் முறையை நடைமுறைப்படுத்தவும் ஒருங்கிணைந்த மின்னணு முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முயற்சியானது அபராதம் வசூலிப்பதிலும், போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவதிலும் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான விநியோகர்களை தேர்ந்தெடுப்பதற்கு இரட்டை உறை அமைப்பு மூலம் முன்மொழிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பது ஏலதாரர்கள் தங்கள் தீர்மானங்களை சமர்ப்பித்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு Millennium ITESP (Pvt.) Ltd மற்றும் Metropolitan Technologies (Pvt.) Ltd ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.







