Arrested woman in handcuffs with hands behind back. criminal is in police station and clenching fists in anger

சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்து, கொண்டுவரப்பட்ட 36,800 சிகரெட்டுக்களை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here