இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவர்கள் அனைவரும் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.








