அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தீர்க்கப்படாத கடந்தகால வழக்குகள் பற்றிக் குறிப்பிடுகையில், “தாஜுதீனின் கொலைக்கு எவரும் பொறுப்புக் கூறப்படவில்லை, லசந்தவின் மரணத்திற்கு இன்னும் பதில் இல்லை, எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பதன் பின்னணியில் உள்ள உண்மை தெரியவில்லை” என்றார்.

“அமைதியான குடிமக்களுக்கு நீதி வழங்கவும், சாதாரண மக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த வழக்குகள் அனைத்தையும் நாங்கள் தொடர்கிறோம். அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்திகளை’ எதிர்பார்க்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here