பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பிய மக்களுக்காக இன்று (16.11.2024) முதல் விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
நாளையும் (17.11.2024) நாளை மறுதினமும் (18.11.2024) இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.








