Sunday, June 7, 2026
No menu items!

பொதுத் தேர்தல்

சிங்கப்பூரில் நாளை மறுதினம் பொதுத் தேர்தல்..!

சிங்கப்பூரில் நாளை மறுதினம் (3) பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் சுமார் 30 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 97 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும், பிரதமராக லாரன்ஸ் வோங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் கட்சிக்கு...

ஜனாதிபதியின் மே தினச் செய்தி!

ஊழல் நிறைந்த சிறப்புரிமை அரசியலால் அழிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கையை உருவாக்கச் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராடுவதற்கு நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச புவிசார் அரசியல் மாற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில்,...

கனடா பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி!

கனடா பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவர் கார்னியின் லிபரல் கட்சியிடம் தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு அது நடந்தது. வாக்குகள் இன்னும் எண்ணப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளின்படி, தொகுதிகள் எனப்படும் 164 தேர்தல் மாவட்டங்களில் லிபரல் கட்சி முன்னிலை...

கலைக்கப்பட்ட சிங்கப்பூர் நாடாளுமன்றம்!

சிங்கப்பூர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் நாடாளுமன்றத் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெற உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலாகவும், பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு முதல் தேர்தலாகவும் இருக்கும். 2020 பொதுத் தேர்தலில், ஆளும் மக்கள் செயல் கட்சி 61.24% வாக்குகளைப் பெற்று 93 நாடாளுமன்ற இடங்களில்...

எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் நேற்று (27) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது. பிரசாத் சிறிவர்தன கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்...

சமல் சஞ்சீவ இடைநீக்கம்…!

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட வேட்பாளராகப் போட்டியிட்ட வைத்தியர் சமல் சஞ்சீவ இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொது சேவை ஆணையத்தின் சுகாதார சேவைகள் குழு நடத்திய விசாரணையில், அந்த நிறுவன விதி முறைகளை மீறிச் செயல்பட்டது தெரியவந்ததையடுத்து இவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் பலருக்கு எதிராக வழக்கு..!

கடந்த பொதுத் தேர்தலில் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள்...

பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நிறைவு..!

இந்த முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8,361 வேட்பாளர்களில் இதுவரை 1,985 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 690 அரசியல் கட்சிகள்...

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க தெரிவு!

புதிய ஜனநாயக முன்னணி தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் விபரத்தை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் ரவி கருணாநாயக்கவை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். 2024 பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசிய பட்டியல் உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவராக இவரது பெயர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.  

எதிர்வரும் 27ஆம் திகதி கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

பொதுத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுகின்றது. இச் சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img