தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பத்து (10) மாவட்டங்களுக்கு இன்று இரவு 10.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவட்டங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக NBRO மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.







