2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் வேட்புமனு கோரப்படவுள்ளது.

ஏப்ரல் முதல் பாதியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த தேர்தல் ஏழு வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here