கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர் கான் அசார்ட், இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான திட்டங்களையும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பது மற்றும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் வெளியுறவு சேவை அதிகாரியாக 27 ஆண்டுகள் சேவை அனுபவத்தைக் கொண்ட சித்தாரா கான், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ள அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். சித்தாரா கான், கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் முன்னாள் மாணவி ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here