நாளை (27ஆம் திகதி) காலைக்குள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள கணிசமான அளவு கொள்கலன்கள் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் சுங்க உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக பணிபுரிவதால் பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடியும் என சுங்க ஊடக பேச்சாளர் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கொள்கலன்களை விரைவாக விடுவிப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவும் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.







